தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” | மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி! | மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா! | இயக்குனர் செல்வராகவனை பிரிகிறாரா கீதாஞ்சலி? | அந்தோணி பாட்டு... கிராமத்து மெட்டு | ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பாயல் ராஜ்புத். 'ஆர்டிஎக்ஸ் 100', இஷா, சித்ரா, ஆர்டிஎக்ஸ் லவ், வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'இருவர் உள்ளம்' என்ற படத்தில் நடித்தார். கடைசியாக 'மங்களாவரம்' என்ற படத்தில் நடித்தார்.
இதற்கிடையில் அவர் 'ரக்ஷனா' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் பல பிரச்சினைகளுக்கு பிறகு வருகிற ஜூன் 7ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பறியும் திகில் கதையான இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரோஷன், மனாஸ், ராஜீப் கனகலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரன்தீப் தாகூர் என்பவர் தயாரித்து இயக்கி உள்ளார்.
தற்போது இந்த படத்தின் புரமோசன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் பாயல் ராஜ்புத் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் குறித்து பாயல் ராஜ்புத் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் ”ரக்ஷனா படத்திற்கு எனக்கு பேசியபடி சம்பளம் தரவில்லை. சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். அதை கேட்டால் தயாரிப்பாளர் உன்னை தெலுங்கு சினிமாவில் இருந்து விரட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார். எனது சொத்து விபரங்களை கேட்கிறார். புரமோசனுக்கு என்னை அழைத்தார், சம்பள பாக்கியை செட்டில் செய்தால்தான் வருவேன் என்று கூறினேன். ஆனால் அவர் நேரடியாகவும், ஆட்கள் மூலமாகவும் என்னை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்” என்ற பாயல் கூறியுள்ளார்.
இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது குறைந்த சம்பளத்தில் நடித்த பாயலுக்கு அப்போதுள்ள சம்பளம் பேசப்பட்டு அது கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது அவர் சம்பளம் பல கோடியாக உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் சம்பள பாக்கி கேட்பதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது.




