புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திகரனி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‛ரத்னம்' படம் நாளை(ஏப்., 26) வெளியாகிறது. அதிரடி ஆக் ஷன் படமாக வெளியாகிறது. இந்த படத்திற்காக பம்பரமாய் சுழன்று புரொமோஷன் செய்துள்ளனர் விஷால், ஹரி. இந்நிலையில் இந்த படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛ரத்னம் படத்திற்கான விநியோக தொகை பாக்கியை தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் படம் வெளியாகும் என அங்குள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. இதுபற்றி பேச முயன்றால் என் அழைப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இப்படி செய்வது கட்டப்பஞ்சாயத்துக்கு சமமானது. எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு என்ன கதியாகும்'' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஷால் அளித்த ஒரு பேட்டியின் போது தனது மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும்படி ரெட் ஜெயன்ட் நிறுவனம் கூறியதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த பிரச்னையால் தனது ரத்னம் படத்திற்கு கூட பிரச்னை வரலாம் என தெரிவித்து இருந்தார்.