நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
விடுதலை படத்திற்கு பின் கதாநாயகனாகவும் தொடரும் சூரி தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். வெற்றிமாறனின் கதையை துரை செந்தில் குமார் இயக்கி உள்ளார். ஷிவதா, ரோஷினி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவான அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் செங்கல் சூளையில் கம்பீரமாக அமர்ந்துள்ளனர் சசிகுமார், உன்னி முகுந்தன். அங்கே தவறு செய்த சிலர் அருகில் இருக்க அதிலிருந்து ஒருவர் தப்பித்து ஓடுகிறார். அவரை சூரி பிடிப்பது போன்று வீடியோ உள்ளது.
வீடியோவில் ‛‛விஸ்வாசத்துல மனுஷங்களுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும். அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா ஜெயிக்கிறது என்னைக்குமே சொக்கன் தான்'' என்ற வசனம் சொக்கன் வேடத்தில் நடிக்கும் சூரியையும், அவரின் விஸ்வாசத்தையும் குறிக்கிறது. யுவனின் பின்னணி இசை அதற்கு பக்க பலமாக உள்ளது. செங்கல் சூளையின் பின்னணியில் கதைக்களம் இருக்கலாம் என தெரிகிறது.