காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'கருடன்'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று 50 கோடி வரை வசூலித்தது. படத்தைத் தெலுங்கில் 'பைரவம்' என்ற பெயரில் ரீமேக் செய்து இந்த வருடம் வெளியிட்டனர். பெல்லம்கொன்டா சாய் சீனிவாஸ், மஞ்சு மனோஜ், நர ரோகித், அதிதி ஷங்கர் மற்றும் பலர் நடித்தனர். ஆனால், படம் தெலுங்கில் தோல்வியைத் தழுவியது.
அதுகுறித்து படத்தின் நாயகன் சாய் சீனிவாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில், “பைரவம் கதை என்னை பெரிதும் உற்சாகப்படுத்தியது. ஆனால், அது ஒரு ரீமேக் படம் என ஊடகங்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் அதை ரீமேக், ரீமேக் என்று குறிப்பிட்டன. அதை அவர்கள் தவறு என்று சொல்ல மாட்டேன். பைரவம் ஒரு ரீமேக் என்பது உண்மை, அதனால் பார்வையாளர்களை டிக்கெட் வாங்கும் அளவுக்கு உற்சாகப்படுத்த முடியவில்லை.
இப்படத்தில் கையெழுத்திடும்போது, இங்குள்ள பலர் 'கருடன்' படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், என் கணிப்பு முற்றிலும் தவறாகிவிட்டது. இருந்தாலும் 'பைரவம்' என்னை ஒரு நடிகனாக நிரூபிக்க வாய்ப்பளித்தது. கிராமப்புற பின்னணியில் ஒரு மாஸ் கதாபாத்திரத்தைத் திறம்பட செய்ய முடியும் என்பதைக் காட்டியது,” என்று தெரிவித்துள்ளார்.
சாய் சீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'கிஷ்கிந்தாபுரி' படம் இந்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.




