ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கருடன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கருடன் படம் தற்போது தெலுங்கில் ரீ-மேக் ஆகி வருகிறது. பெல்லம்கொண்ட சீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார். கருடன் பட வெற்றிக்குப் பிறகு லெஜண்ட் சரவணனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் துரை செந்தில் குமார். இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இவரது படத்தை முடித்த பின் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதனை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.