நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கருடன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கருடன் படம் தற்போது தெலுங்கில் ரீ-மேக் ஆகி வருகிறது. பெல்லம்கொண்ட சீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார். கருடன் பட வெற்றிக்குப் பிறகு லெஜண்ட் சரவணனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் துரை செந்தில் குமார். இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இவரது படத்தை முடித்த பின் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதனை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.