எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
தமிழில் மண்டேலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். அதன்பிறகு இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த மாவீரன் படம் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்றது.
மாவீரன் படத்திற்கு பிறகு அஸ்வின் ஹிந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆன கரண் ஜோஹர் தயாரிக்கின்றார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து நடிகர் விக்ரமை வைத்து தமிழில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதுதவிர பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பட வாய்ப்பும் வந்துள்ளது. இவற்றில் யாருடைய இயக்கத்தில் விக்ரம் முதலில் நடிப்பார் என இனிமேல் தெரியவரும்.