தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

மிருகங்களை வைத்து படம் எடுத்து பல வெற்றிகளை கொடுத்தவர் ராம நாராயணன். ஆடு, மாடு, குரங்கு, பாம்பு, யானை உள்ளிட்ட பல மிருகங்களை நடிக்க வைத்து படம் இயக்கி உள்ளார். அவர் கழுகை வைத்து தயாரித்த ஒரே படம் 'கழுகுமலை கள்ளன்'.
1988ல் வெளிவந்த இந்தப் படத்தில் சரண்ராஜ் நாயகனாக நடித்தார். வில்லனாக நடித்து வந்த அந்த சரண்ராஜ் ஆக் ஷன் ஹீரோவாக நடித்த முதல் படம். அவருடன் ரேகா, சின்னி ஜெயந்த், லூசு மோகன், நாசர், கோவை சரளா, வாசுகி, லலிதா குமாரி, கே.ஆர்.சாவித்திரி, அனாமிகா, பேபி மேதாவிலாசினி, டிஸ்கோ சாந்தி உள்ளிட்ட பலர் நடித்தனர். ராஜசேகர் இயக்கினார். சந்திரபோஸ் இசையமைத்தார்.
மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், கும்பக்கரை தங்கையா பாணியிலான கிராமத்து ஆக் ஷன் ஹீரோ கதை. அப்பாவியான சரண்ராஜ் குடும்பத்தை வில்லன்கள் அழித்து விடுவதால் அவர் பொங்கி எழுந்து கழுகுமலை கள்ளனாக மாறி அவர்களை பழி வாங்குவதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் சரண்ராஜ் நண்பராக கழுகு நடித்திருந்தது. வில்லன்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சொல்வது, காதலிக்கு தூது செல்வது, இறுதியில் நண்பனுக்காக உயிர் தியாகம் செய்வது என ஒரு தனி கேரக்டராகவே கழுகு நடித்திருந்தது. இதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட கழுகு நடிக்க வைக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது அதே கழுகு சரண்ராஜின் முகத்தில் கொத்தி அவர் சிகிச்சை பெற்ற சம்பவமும் நடந்தது .