விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருந்தனர். வருட இறுதி நாட்கள், புத்தாண்டு என குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்கள். அதனால், வர இயலவில்லை என்ற தகவல் வெளியானது.
தற்போது ஒவ்வொருவராக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சரத்குமார், சசிகுமார், சிவகுமார், கார்த்தி ஆகியோர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கடந்த இரண்டு நாட்களில் அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டிலிருந்து மும்பை திரும்பிய சூர்யா, இன்று சென்னைக்கு வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், சமாதி முன்பு அமர்ந்து சில நிமிடங்கள் அமர்ந்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
பத்திரிகையாளர்களிடம் அழுது கொண்டே பேசுகையில் விஜயகாந்துடன் இணைந்து 'பெரியண்ணா' படத்தில் நடித்த நாட்களை நினைவு கூர்ந்தார். ‛‛அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் மறைந்தாலும் எப்போதும் அவரின் நினைவு இருக்கும்'' என்றார்.
அதன்பின்பு சூர்யா, கார்த்தி அவர்களது அப்பா சிவக்குமார் ஆகியோர் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அங்கு அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.