விஜய் உடன் லிப்டில் எடுத்த ‛மிரர் செல்பி': போட்டோ பகிர்ந்து வாழ்த்திய திரிஷா | விவசாயி என்ற வார்த்தையே பவர்புல்: ‛உழவர்களின் தோழன்' விருது பெற்ற சிவகார்த்திகேயன் | ஜூன் 25ல் வெளியாகிறது ‛இந்தியன்-2' டிரைலர் | பிடிகொடுக்காமல் நழுவும் பாணா காத்தாடி | மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர் | சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்! | டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | இளையராஜாவிடம் கற்றுக்கொண்டவை: கார்த்திக் ராஜா சிறப்பு பேட்டி | புறக்கணிப்புகளை புறந்தள்ளி சாதிக்கும் சவுந்தர்யா நஞ்சுந்தன் | தெலுங்கிலும் லாபத்தைக் கொடுத்த 'மகாராஜா' |
இந்தியத் திரையுலகத்தின் டாப் நடிகரான ஷாரூக்கான் நடிப்பில் 'டங்கி' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்படம் வெற்றி பெறுவதற்காக ஜம்முவில் கத்ரா என்ற இடத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் ஷாரூக்கான்.
இந்த ஆண்டில் அவர் நடித்து வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'பதான், ஜவான்' படங்களின் வெளியீட்டிற்கு முன்பாகவும் அந்த கோயிலுக்குச் சென்றார் ஷாரூக்கான். தொடர்ந்து 'டங்கி' வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளார்.
கோயிலில் தன்னால் பக்தர்களுக்குத் தொந்தரவு வரக் கூடாதென தனது முகத்தை மறைத்துக் கொண்டு அவர் சென்றுள்ளார். போலீசார் பாதுகாப்புடன் ஷாரூக் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
ஒரே ஆண்டில் வெளியாகும் ஷாரூக்கின் மூன்றாவது படம் 'டங்கி'. முந்தைய இரண்டு படங்களைப் போலவே இந்தப் படமும் 1000 கோடியை வசூலிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.