கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் |

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் டங்கி. ஷாரூக்கான், டாப்ஸி, போமன் இரானி, விக்கி கவுஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பஞ்சாபிலிருந்து பல நாடுகளை திருட்டுத்தனமாக கடந்து லண்டனுக்கு வேலைக்கு செல்லும் 5 நண்பர்களை பற்றிய கதை. இந்த படம் தங்கள் நாட்டை தவறாக சித்தரிப்பதாக சொல்லி இங்கிலாந்து நாட்டில் தணிக்கை சான்றிதழ் மறுத்தனர்.
இந்த நிலையில் படத்தின் உண்மை தன்மையை அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு தூதர்களுக்கு மும்பையில் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
ஹங்கேரி, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சுவிஸ், ஸ்பெயின், துருக்கி, இஸ்ரேல், தென் கொரியா, பின்லாந்து, மொரிஷியஸ், ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர். திரையிடலுக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வெளிநாட்டு தூதர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.




