'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் டங்கி. ஷாரூக்கான், டாப்ஸி, போமன் இரானி, விக்கி கவுஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பஞ்சாபிலிருந்து பல நாடுகளை திருட்டுத்தனமாக கடந்து லண்டனுக்கு வேலைக்கு செல்லும் 5 நண்பர்களை பற்றிய கதை. இந்த படம் தங்கள் நாட்டை தவறாக சித்தரிப்பதாக சொல்லி இங்கிலாந்து நாட்டில் தணிக்கை சான்றிதழ் மறுத்தனர்.
இந்த நிலையில் படத்தின் உண்மை தன்மையை அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு தூதர்களுக்கு மும்பையில் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
ஹங்கேரி, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சுவிஸ், ஸ்பெயின், துருக்கி, இஸ்ரேல், தென் கொரியா, பின்லாந்து, மொரிஷியஸ், ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர். திரையிடலுக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வெளிநாட்டு தூதர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.