கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது |

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை அஞ்சலி பாட்டீல். தமிழில் காலா, குதிரைவால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அஞ்சலி பாட்டீல் மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு அஞ்சலிக்கு கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் போன் செய்தார். அவர் உங்களது பெயரில் வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை சுங்க துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கூறினார்.
இதைத் தொடர்ந்து மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு பானர்ஜி என்பவர் அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். இதனை சரிசெய்ய 96 ஆயிரத்து 525 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் பயந்துவிட்ட அஞ்சலி அவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பினார். பின்னர் அவர் மேலும் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 291 செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த பணத்தையும் நடிகை அஞ்சலி அனுப்பி வைத்துள்ளார்.
இதன் பிறகுதான் அஞ்சலி பாட்டீல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையிடம் நூதன முறையில் 5 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதால் குற்றவாளி எளிதில் பிடிபட்டு விடுவார். அஞ்சலி பக்கம் எந்த தவறும் இல்லை என்றால் அவர் ஏன் பணம் அனுப்ப வேண்டும். இந்த இரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.




