நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் டங்கி. ஷாரூக்கான், டாப்ஸி, போமன் இரானி, விக்கி கவுஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பஞ்சாபிலிருந்து பல நாடுகளை திருட்டுத்தனமாக கடந்து லண்டனுக்கு வேலைக்கு செல்லும் 5 நண்பர்களை பற்றிய கதை. இந்த படம் தங்கள் நாட்டை தவறாக சித்தரிப்பதாக சொல்லி இங்கிலாந்து நாட்டில் தணிக்கை சான்றிதழ் மறுத்தனர்.
இந்த நிலையில் படத்தின் உண்மை தன்மையை அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு தூதர்களுக்கு மும்பையில் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
ஹங்கேரி, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சுவிஸ், ஸ்பெயின், துருக்கி, இஸ்ரேல், தென் கொரியா, பின்லாந்து, மொரிஷியஸ், ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர். திரையிடலுக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வெளிநாட்டு தூதர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.