கடந்த வாரம் ஒரு வாரிசு அறிமுகம், இந்த வாரம் மற்றொரு வாரிசு அறிமுகம் | கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து |
மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் மற்றும் பலர் நடிப்பில் ஜூன் 18, 2010ல் வெளிவந்த படம் 'ராவண்'. அப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆனது குறித்து அபிஷேக் பச்சன் ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவைக் குறிப்பிட்டு, “மறக்க முடியாத ஒரு நடிப்பு அபிஷேக். உனது மற்ற படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பு இந்தப் படத்தில்… அதுதான் ஒரு கலைஞரின் உண்மையான மதிப்பு,” என்று குறிப்பிட்டிருந்தார் அபிஷேக்கின் தந்தையும், நடிகருமான அமிதாப் பச்சன்.
அந்தப் படத்தில் அபிஷேக் ஜோடியாக நடித்தது அமிதாப்பின் மருமகளும், அபிஷேக்கின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய். ஆனால், ஐஸ்வர்யா பற்றி தனது பதிவில் ஒரு வார்த்தையைக் கூட அமிதாப் குறிப்பிடவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரது கமெண்ட் பகுதியில் ஏன் ஐஸ்வர்யா பற்றி சொல்லவில்லை என்று கேட்டுள்ளனர்.
அபிஷேக், ஐஸ்வர்யா பற்றி அடிக்கடி பிரிவு வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது போன்று அவரைக் குறிப்பிடாமல் அவரது மாமனாரே பதிவிடும் போது அடங்கிய வதந்திகள் மீண்டும் எழுகின்றன.