ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மலையாள நடிகை பார்வதி கதைகளுக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர் மனதுக்கு திருப்தி தரும் படங்களில் அவர் நடிக்க தவறுவதில்லை. மேலும் கடந்த சில வருடங்களாக பாலிவுட்டிலும் பயணித்து வரும் பார்வதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள கடக் சிங் என்கிற படம் சமீபத்தில் ஜீ ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அனிருத்தா ராய் சவுத்ரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் பார்வதி ஒரு தலைமை செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனுபவம் குறித்து பார்வதி கூறும்போது, “ஏற்கனவே மலையாளத்தில் டேக் ஆப் என்கிற படத்தில் செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த அனுபவம் இந்த படத்தில் நடிப்பதற்கு ரொம்பவே கை கொடுத்தது. இருந்தாலும் வட மாநிலத்தில் பணி புரியும் கேரளாவை சேர்ந்த பெண்ணாக இந்த படத்தில் நடித்ததால் நிஜத்திலேயே அது போன்று வடமாநிலத்தில் வேலை பார்த்த கேரள செவிலியர்கள் பலரிடம் அவர்கள் வடமாநில பாஷையை பேசும் விதம் குறித்து கேட்டு அறிந்து கொண்டு அதையும் படத்தில் பயன்படுத்தினேன்
அதுமட்டுமல்ல பங்கஜ் திரிபாதியும் நடிப்பில் பல புதிய விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடம் கற்றல் அனுபவமே புதுவிதமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவாக பிரித்து தலைமைப்பொறுப்பை ஒவ்வொருவரிடமும் மாற்றி மாற்றி கொடுத்தார். இந்த அனுபவத்தை வைத்து நிச்சயமாக ஒரு படத்தை இயக்க முடியும்.. அதனால் ஒவ்வொரு நாள் காலையும் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்தபடி படப்படிப்பிற்கு கிளம்பி சென்றேன்” என்று கூறியுள்ளார்.




