விஜபி-2 படத்தில் செலக்ட் ஆனேன் ஆனால்... வசந்த் வசியின் சோகக்கதை | நடனப்பள்ளி திறந்த ஹரிப்பிரியா | காலில் விழுந்த தந்தை : உணர்ச்சிமயமான சரிகமப நிகழ்ச்சி மேடை | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரியில் சாதித்த டி.ஆர்.மகாலிங்கம் | ஆஸ்கர் அகாடமியில் இந்தியர்களின் ஆதிக்கம் | பொய்யான வசூல் நிலவரம் வெளியிட்டால் நடவடிக்கை : மலையாள தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | நாயகன் ஆன கேட்க, பேச முடியாத இளைஞர் | பள்ளி பாடத்தில் தமன்னா வரலாறு இடம் பெற்றதால் சர்ச்சை | ரஜினிக்கு லுக் டெஸ்ட் ; ஜூலையில் கூலி படப்பிடிப்பு : லோகேஷ் அப்டேட் | ரேஸ் காரில் 222 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்த அஜித் |
தர்பார் படத்திற்கு பின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர மீண்டும் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகனாக சல்மான்கான் நடிக்கிறார். முதன்முறையாக இவர்கள் இணைந்து பணியாற்றும் படம் இதுவாகும்.
சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கரீனா கபூர் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று ஜூன் 18ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் சல்மான் மற்றும் தயாரிப்பாளர் சாஜித் உடன் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் முருகதாஸ்.