பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாலாஜி சகதிவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் அறிமுகமானவர் மனீஷா. அதையடுத்து சுசீந்திரன் இயக்கியுள்ள ஆதலால் காதல செய்வீர் என்ற படத்தில் நாயகியாக நடித்த அவர், தற்போது கரு.பழனியப்பன் இயக்கி வரும் ஜன்னல் ஓரம் என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இந்த படத்தில் அவர் நடித்து வந்தபோது, யாரோ ஒரு இளைஞர் தினமும் ஸ்பாட்டுக்கு வந்து மனீஷாவை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தாகவும், அவர் மனீஷாவின் முன்னாள் பாய் பிரண்ட் என்றும், மனீஷா தங்கியிருக்கும் இடம் தெரியாததால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து தொல்லை கொடுப்பதாகவும், மனீஷா இதுப்பற்றி படக்குழுவிடம் புகார் தெரிவித்ததாகவும், அவர்கள் அந்த பையனை விரட்டியத்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை மனீஷா மறுத்துள்ளார். இதுகுறித்து போனில் அவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், இதுவெறும் வதந்தி தான் என்றும் கூறியுள்ளார்.