மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி |
பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ் 'வழக்கு எண்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லன்னா நயன்தார, 'சென்னை 28 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகள் இன்றி பெங்களூரு திரும்பிய மனிஷா சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'நினைவெல்லாம் நீயடா' என்ற படம் வருகிற 23ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிலந்தி, ரணதந்திரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கி உள்ளார். ராயல் பாபு தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் மனிஷா, தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக 'நினைவெல்லாம் நீயடா' படத்தின் தயாரிப்பாளர் மீது புகார் தெரிவித்து உள்ளார். நடிகர் சங்கத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''நான் நினைவெல்லாம் நீயடா படத்தில் நடித்து இருக்கிறேன். அந்த படத்துக்கு பேசிய சம்பளத்தில் 3 லட்சம் தராமல் பாக்கி வைத்துள்ளனர். எனவே படம் வெளியாகும் சூழலில் அதனை வசூலித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகார் மனுவை தயாரிப்பாளர் சங்கத்துக்கு, நடிகர் சங்கம் அனுப்பி வைத்துள்ளது.