வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்தன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். பாலிவுட்டில் அறிமுகமான இவரின் குட்பை படம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான அனிமல் படம் அவரை உயரத்தில் தூக்கி வைத்துள்ளது. ரூ.2 கோடி சம்பளம் பெற்று வந்த ராஷ்மிகா இப்போது தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர்ப்ஸ் பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். சர்வதேச மீடியா நிறுவனமான போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டிற்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா இடம் பிடித்துள்ளார். மேலும் இசைத்துறையில் அதிதி சைகல் என்ற பா டகி இடம் பெற்றுள்ளார்.
ராஷ்மிகா தற்போது தனுஷின் 51வது படம், புஷ்பா 2ம் பாகம், ரெயின்போ படங்களில் நடித்து வருகிறார். அனிமல் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.