'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
சின்னத்திரை ரசிகர்ளின் மிகவும் பேவரைட் சீரியலான எதிர்நீச்சல் தொடர் அதில் நடிக்கும் எதார்த்தமான கதாபாத்திரங்களுக்காகவே அதிகம் விரும்பப்படுகிறது. அதிலும் குணசேகரன் கதாபாத்திரத்தை ரசிக்காதே ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகர் மாரிமுத்து அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். ஆனால், அவரது திடீர் மரணம் காரணமாக எதிர்நீச்சல் தொடரின் கதையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தாலும் சீரியல் பழைய வேகத்திற்கு வரவில்லை. குணசேகரன் கதாபாத்திரமும் அடிக்கடி காணமால் போய்விடுகிறது. இதற்கிடையில் புதிய வில்லன் என கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தை நுழைத்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஆர்ஜே நெலு நடித்து வருகிறார். ஏற்கனவே குறும்படங்களிலும், சில படங்களிலும் நடித்தும் இயக்கியும் வந்த ஆர்ஜே நெலு எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால், அவர் தற்போது பிரபல இயக்குநரான வசந்தபாலனுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் சினிமாவுக்கு செல்கிறாரா? அவர் சினிமாவில் கமிட்டாகிவிட்டால் கிருஷ்ணா கதாபாத்திரமும் காணமல் போகுமா? என ரசிகர்கள் சோகமாக கேட்டு வருகின்றனர்.