சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நடிகர் திலீப் மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை முடித்து, நடிகர் திலீப் உள்ளிட்ட மூவர் இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் என கூறி விடுவித்தது. இந்த வழக்கின் முதன்மை குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட மீதி ஆறு பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த ஆறு பேருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி ஆறு பேரும் 20 வருடங்களுக்கு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதமாக தலா ரூபாய் 50,000 செலுத்த வேண்டும் என்றும் தவறினால் அதற்காக இன்னும் ஒரு வருடம் அதிகம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் முதன்மை குற்றவாளியான பல்சர் சுனிலுக்கு இன்னொரு பிரிவின் கீழ் ஐந்து வருடம் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டாலும் ஒரே சமயத்தில் இந்த இரு தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதால் அவருக்கும் மொத்தமே 20 வருடம் தண்டனை காலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.




