நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்குவாட் சார்பில் கார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள படம் '29'. மேயாத மான், ஆடை, குலு குலு' படங்களை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ளார். விது, பிரீத்தி அஸ்ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். ப்ரீத்தி அஸ்ராணி சில காட்சிகளில் நடிக்க மறுத்ததாகவும் இதற்காக கதையை மாற்றியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து இயக்குனர் ரத்னகுமார் கூறும்போது "பிரீத்தி அஸ்ரானியிடம் கதை சொன்னேன். சில காட்சிகள் நெருடலாக இருப்பதால், நடிக்க மனம் வரவில்லை' என்றார். அவர் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்தேன். அதற்குபிறகு படத்தின் தோற்றம் மாறிவிட்டது. 'நோ' சொன்ன அவருக்கு நன்றி" என்றார்.