நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஸ்டூடியோக்களில் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சினிமாவை முதன்முதலாக கிராமத்து தெருக்களில் எடுத்தவர் பாரதிராஜா என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முன்பே கிராமங்களில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில காட்சிகளோ அல்லது பிளாஸ்பேக் காட்சிகளோ கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் முழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் 'காலம் மாறிப்போச்சு' என்று சினிமா வரலாற்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.
இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட 'ரோஜு லு மாராயி' என்ற படத்தின் ரீமேக். அக்னினேனி நாகேஸ்வரராவ், சவுகார் ஜானகி நடித்த படம். 'காலம் மாறிப் போச்சு' படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி நடித்திருந்தனர். டபி சாணக்கியா இயக்கி இருந்தார்.
கிராமத்தில் உள்ள நில பிரபு ஒருவர் ஏழை விவசாயிகளை கொடுமைப்படுத்துவதும் அவர்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுவதும் படத்தின் கதை. இந்தப் படத்தின் வசனங்களை முகவை ராஜமாணிக்கம் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் எழுதி இருந்தார்.