இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் 'லியோ' படத்தை இயக்கி வருகிறார்.
விஜய் படத்தை இயக்கினால் அடுத்து ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என சில ரசிகர்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். அதற்கு உதாரணமாக இயக்குனர் நெல்சனையும் சேர்த்து குறிப்பிட்டிருந்தனர். விஜய் நடிப்பில் வெளிவந்த 'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு நெல்சனுக்கு 'ஜெயிலர்' படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது போலவே இப்போது லோகேஷுக்குக் கிடைத்துள்ளது.
அப்படியென்றால் அடுத்து வெங்கட் பிரபுவுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். விஜய்யின் 68வது படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபுதான். அதனால், அடுத்து அவர் ரஜினியை இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.
விஜய் நடித்த 'தெறி, மெர்சல், பிகில்' என மூன்று படங்களை இயக்கிய அட்லீக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக, அவர் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானை இயக்கப் போய்விட்டார். இது பற்றி ரசிகர்கள் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை விஜய்யின் மூன்று படங்களை இயக்கினால் பாலிவுட் போகலாம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.