சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூல் என்றாலே ஆச்சரியமாக இருந்தது. இப்போது 500 கோடி வசூல் என்பதை ஓரளவிற்கு அடைய முடிகிறது. அதிலும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியான இரண்டு படங்கள் 500 கோடி வசூலைப் பெறுவது எல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய விஷயமல்ல.
கடந்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான தமிழ்ப் படமான 'ஜெயிலர்' படம் தென்னிந்தியா மற்றும் உலக நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று 500 கோடி வசூலைக் கடந்து 600 கோடிகளைத் தாண்டியும் போய்க் கொண்டிருக்கிறது.
இப்போது ஹிந்திப் படமான 'ஜவான்' படம் நான்கே நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. அடுத்து 1000 கோடி வசூலை நோக்கி அந்தப் படம் போகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் 'ஜெயிலர், ஜவான்' ஆகிய இரண்டு படங்களையும் எழுதும் போது 'J' என்ற ஆங்கில எழுத்தில்தான் வரும். அதனால், சென்டிமென்ட்டாக திரையுலகினல் இனி 'J' எனத் தொடங்கும் எழுத்தில் படங்களின் பெயர்களைத் தேடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.