பிளாஷ்பேக் : உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான “சாது மிரண்டால்” | எஸ்பிபி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ் | ரஜினிக்கு அம்மாவாக நடித்தவர் சட்டசபை தேர்தலில் போட்டி | அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டே | அனந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா வழிபாடு | சாதி, மதம் இல்லாதவர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நடிகர் பார்த்திபன் | கைதி ஹிந்தி ரைட்ஸ் விவகாரம் : அஜய் தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்த ட்ரீம் வாரியர்ஸ் | மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி | 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது | தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து |

இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூல் என்றாலே ஆச்சரியமாக இருந்தது. இப்போது 500 கோடி வசூல் என்பதை ஓரளவிற்கு அடைய முடிகிறது. அதிலும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியான இரண்டு படங்கள் 500 கோடி வசூலைப் பெறுவது எல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய விஷயமல்ல.
கடந்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான தமிழ்ப் படமான 'ஜெயிலர்' படம் தென்னிந்தியா மற்றும் உலக நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று 500 கோடி வசூலைக் கடந்து 600 கோடிகளைத் தாண்டியும் போய்க் கொண்டிருக்கிறது.
இப்போது ஹிந்திப் படமான 'ஜவான்' படம் நான்கே நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. அடுத்து 1000 கோடி வசூலை நோக்கி அந்தப் படம் போகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் 'ஜெயிலர், ஜவான்' ஆகிய இரண்டு படங்களையும் எழுதும் போது 'J' என்ற ஆங்கில எழுத்தில்தான் வரும். அதனால், சென்டிமென்ட்டாக திரையுலகினல் இனி 'J' எனத் தொடங்கும் எழுத்தில் படங்களின் பெயர்களைத் தேடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




