பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூல் என்றாலே ஆச்சரியமாக இருந்தது. இப்போது 500 கோடி வசூல் என்பதை ஓரளவிற்கு அடைய முடிகிறது. அதிலும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியான இரண்டு படங்கள் 500 கோடி வசூலைப் பெறுவது எல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய விஷயமல்ல.
கடந்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான தமிழ்ப் படமான 'ஜெயிலர்' படம் தென்னிந்தியா மற்றும் உலக நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று 500 கோடி வசூலைக் கடந்து 600 கோடிகளைத் தாண்டியும் போய்க் கொண்டிருக்கிறது.
இப்போது ஹிந்திப் படமான 'ஜவான்' படம் நான்கே நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. அடுத்து 1000 கோடி வசூலை நோக்கி அந்தப் படம் போகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் 'ஜெயிலர், ஜவான்' ஆகிய இரண்டு படங்களையும் எழுதும் போது 'J' என்ற ஆங்கில எழுத்தில்தான் வரும். அதனால், சென்டிமென்ட்டாக திரையுலகினல் இனி 'J' எனத் தொடங்கும் எழுத்தில் படங்களின் பெயர்களைத் தேடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.