சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்குத் திரையுலகில் சீனியர் நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. 'புதுமைப்பெண்' படத்தில் அறிமுகமான டாக்டர் ராஜசேகர், அந்தக் காலத்தில் வெளியான தெலுங்கு டப்பிங் படமான 'இதுதான்டா போலீஸ்' படம் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது மனைவியான ஜீவிதா, தமிழில் 'உறவைக் காத்த கிளி' படம் மூலம் அறிமுகமானார். தமிழில் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். ராஜசேகர், ஜீவிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களது மகள்களான ஷிவானி, ஷிவாத்மிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகின்றனர்.
சிரஞ்சீவியின் மைத்துனரும், தயாரிப்பாளரும், அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் தொடர்ந்து அவதூறு வழக்கு ஒன்றில் ராஜசேகர், ஜீவிதா தம்பதியருக்கு நம்பள்ளி, 17வது கூடுதல் தலைமை மெட்ரோபலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஒரு ஆண்டு தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சிரஞ்சீவி மீதும், சிரஞ்சீவி ரத்த வங்கி மீதும் ரத்தத்தை விற்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது அல்லு அரவிந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜசேகர், ஜீவிதா ஆகியோர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டிய அவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.