ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
தெலுங்குத் திரையுலகில் சீனியர் நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. 'புதுமைப்பெண்' படத்தில் அறிமுகமான டாக்டர் ராஜசேகர், அந்தக் காலத்தில் வெளியான தெலுங்கு டப்பிங் படமான 'இதுதான்டா போலீஸ்' படம் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது மனைவியான ஜீவிதா, தமிழில் 'உறவைக் காத்த கிளி' படம் மூலம் அறிமுகமானார். தமிழில் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். ராஜசேகர், ஜீவிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களது மகள்களான ஷிவானி, ஷிவாத்மிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகின்றனர்.
சிரஞ்சீவியின் மைத்துனரும், தயாரிப்பாளரும், அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் தொடர்ந்து அவதூறு வழக்கு ஒன்றில் ராஜசேகர், ஜீவிதா தம்பதியருக்கு நம்பள்ளி, 17வது கூடுதல் தலைமை மெட்ரோபலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஒரு ஆண்டு தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சிரஞ்சீவி மீதும், சிரஞ்சீவி ரத்த வங்கி மீதும் ரத்தத்தை விற்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது அல்லு அரவிந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜசேகர், ஜீவிதா ஆகியோர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டிய அவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.