பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் மோகன்லால், தனது நீண்டநாள் கனவான டைரக்சன் ஆசையையும் நிறைவேற்றும் விதமாக தற்போது பாரோஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் 3-டி யில் உருவாகி வரும் இந்த படத்தில் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகவாலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடிக்கிறார்.
சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் பணிகளை கவனிப்பதற்காகவே அதிக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனம் செலுத்தி வருகிறார் மோகன்லால்.
இந்த நிலையில் இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழுவினர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி படத்தொகுப்பின்போது அதிலிருந்து வெட்டி நீக்கப்பட்ட காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக ஒரு படம் வெளியானபிறகு அதிலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் என வெளியிடப்படுவது தான் வழக்கம். ஆனால் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இப்படி நீக்கப்பட்ட காட்சியை மோகன்லால் படக்குழுவினர் வெளியிட்டு இருப்பது ஆச்சரியம்தான்..