விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் |
'1987ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ராமாயணம். ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று காத்துக்கிடந்து பார்த்த தொடர். ஒவ்வொரு டிவிக்கு முன்னாலும் ஏராளமான மக்கள் அமர்ந்து பார்த்த தொடர். அந்த காலத்திலேயே ராமானந்த சாகர் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த தொடர். இதில் அருண் கோவில் ராமராகவும், தீபிகா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர்.
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் என்ற உலக சாதனையை படைத்தது. கொரோனா ஊரடங்கின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி 'ராமாயணம்' தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பு செய்தது. இந்த நிலையில் இந்த தொடரை 3வது முறையாக மீண்டும் ஒளிபரப்பாகிறது. ஷெமாரூ டிவியில் இந்த தொடர் இன்று (ஜூலை 3) முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடர் மொத்தம் 78 எபிசோட்களை கொண்டது. 'ஆதிபுருஷ்' படம் கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் நேரத்தில் 'ராமாயணம்' மீண்டும் ஒளிபரப்பாவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.