முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் பஹத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். மிக முக்கிய வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நகைச்சுவை நடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதுடன், இந்த படத்தில் ஒரு பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். அவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் முழு பாடல் இது. இதற்கு முன்னதாக காதலன் படத்தில் அவரது இசையில் பேட்ட ராப் என்கிற பாடலில் சில வார்த்தைகளை மட்டுமே பாடி இருந்தார் வடிவேலு என்பது ரசிகர்களுக்கு தெரியும்.
இந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அஜித் நடிப்பில் வெளியான பவித்ரா திரைப்படத்தில் தானும் கோவை சரளாவும் இணைந்து ஒரு பாடலை பாடியதாக ஒரு புதிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் வடிவேலு. இந்தப் பாடல் பதிவின்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு கூடத்தில் இல்லை என்றும் அவரது உதவியாளர்கள் தான் இதை பதிவு செய்தனர் என்றும் இப்படி ஒரு பாடல் தான் பாடியது கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நினைவில் இருக்காது என்றும் கூறியுள்ளார் வடிவேலு. அவர் கூறிய அந்த பாடல் பவித்ரா படத்திலும் இடம் பெறவில்லை.
அதேசமயம் இந்த படத்தில் வடிவேலு - கோவை சரளா இடையே ஈச்சம்பழம் என்ற பாடல் உள்ளது. இந்த பாடலை சாகுல் ஹமீது, சித்ரா பாடி உள்ளனர். ஒருவேளை இந்த பாடலை தான் அவர் குறிப்பிட்டு இருப்பார் போல.