இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தெலுங்கு படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த சித்தி இத்னானி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் அவர் சிம்பு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு பரபரப்பை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தார். கடைசியாக 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்தார். சசி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் சித்தி திடீரென சமூக சேவையில் இறங்கி உள்ளார். மும்பையில் உள்ள லிட்டில் ஏஞ்சல் என்கிற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று பரிசுகள் வழங்கிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ''நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் மதிய நேரத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பில்லாதது” என்று பதிவிட்டுள்ளார்.