தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ் | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' |

தெலுங்கு படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த சித்தி இத்னானி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் அவர் சிம்பு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு பரபரப்பை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தார். கடைசியாக 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்தார். சசி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் சித்தி திடீரென சமூக சேவையில் இறங்கி உள்ளார். மும்பையில் உள்ள லிட்டில் ஏஞ்சல் என்கிற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று பரிசுகள் வழங்கிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ''நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் மதிய நேரத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பில்லாதது” என்று பதிவிட்டுள்ளார்.