பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
சின்னத்திரை நடிகர்கள் தினேஷ் மற்றும் ரச்சிதா மஹாலெட்சுமி ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது இருவருக்குமிடையே பிரச்னை முற்றிப்போய் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டது. தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டுவதாக ரச்சிதா அண்மையில் போலீஸ் புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து இருவருமிடம் விசாரனை நடத்திய காவல்துறையினர் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடுமாறு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ரச்சிதாவின் புகார் குறித்து விளக்கமளித்துள்ள தினேஷ், தனது செல்போனில் ரச்சிதாவுடன் பேசிய சேட் பாக்ஸை காட்டி தான் ஆபாசமாகவோ, திட்டியோ ரச்சிதாவிற்கு மெசேஜ் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் ரச்சிதாவின் நடத்தையை வைத்து பார்க்கும் போது இனி சேர்ந்து வாழ வாய்ப்பை இல்லை என்பதை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.