'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு |

தமிழ்நாட்டில் ரஜினியும், கமலும், விஜய்யும் அஜித்தும் நண்பர்களாக இருப்பதை போன்று பாலிவுட்டில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் ஆகிய மூவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த மூவரும் திடீரென சல்மான்கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு அதிகாலை 4 மணி வரை நடந்துள்ளது. இதில் அவர்கள் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளனர். அமீர்கான் தனது பிரேக்கை கைவிட்டு மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று சல்மான்கானும், ஷாருக்கானும் கேட்டுக் கொண்டுள்ளனர். மூவரும் இணைந்து ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்றும், இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.