மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது மாமன்னன், ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா, சைரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் சகோதரி ரேவதி சுரேஷ் உள்ளிட்டோர் இன்று(மே 27) காலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.
அதன் பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், ”நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது என் மனதுக்கு இதமாக உள்ளது. அதோடு என் சகோதரி ரேவதி சுரேஷின் இயக்கும் குறும்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.
கோவிலுக்கு வெளியே கீர்த்தி சுரேஷுடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் அங்கு சற்று நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் தேவஸ்தான ஊழியர்கள் அவரை பேட்டரி காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.