கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
சின்னத்திரை இயக்குநர் ஓ.என்.ரத்னம் அழகு, வாணி ராணி போன்ற டிவி சீரியல்களை இயக்கினார். தற்போது ப்ரியமான தோழி, பாண்டவர் இல்லம் மற்றும் செவ்வந்தி ஆகிய ஹிட் தொடர்களை இயக்கி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் ப்ரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட ஓ.என்.ரத்னம், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ள மகன்களை சென்னைக்கு அழைத்து வர ஓ.என்.ரத்னம் புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதாம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகன்களை வீட்டிற்கு அழைத்து வந்த போது அங்கே அவரது மனைவி சடலமாக கிடந்துள்ளார். ரத்னத்திற்கும் ப்ரியாவுக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த ப்ரியா, தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குநர் ஓ.என்.ரத்னத்தின் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.