கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு |
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலுமகேந்திரா தனது ஆரம்ப காலத்தில் 'அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை' என மென்மையான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் பரவலாக பாலுமகேந்திராவிற்கு இப்படியான படங்கள்தான் எடுக்க வரும், கமர்ஷியல் படங்கள் வராது என்ற விமர்சனம் இருந்தது.
ஒரு நேர்காணலில் ஒரு பத்திரிகையாளர் இதனை அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். இதனால் கோபம் அடைந்த பாலுமகேந்திரா நீங்கள் கேட்ட மாதிரி என்னால் கமர்ஷியல் படமும் செய்ய முடியும் என்று சவால் விட்டு உருவான படம்தான் 'நீங்கள் கேட்டவை'. படத்தின் கதை அதற்கு முன்பே பலமுறை படமான சாதாரண கதைதான். அந்த கதையை வேண்டுமென்றேதான் அவர் தேர்வு செய்தார்.
தன் தாயை பலாத்காரம் செய்து கொன்றவர்களை, மகன்கள் வளர்ந்து ஆளாகி பழிவாங்குகிற கதை. ஒரு மகனாக தியாகராஜனும், இன்னொரு மகனாக பானுசந்தரும் நடித்தார்கள். நாயகிகளாக சரிதாவும், அர்ச்சனாவும் நடித்தார்கள். சில்க் ஸ்மிதா கவர்ச்சியான வேடம் ஒன்றில் நடித்தார், இவர்கள் தவிர பூர்ணிமா பாக்யராஜ், வனிதா, பாலன் கே.நாயர் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. படமும் பெரிய வெற்றி வெற்றது.
ஒரு படத்திற்கு கதையை விட அந்த கதையை எப்படி எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை நிரூபித்த படம். ஒரு சவாலுக்காக இந்த படத்தை இயக்கினாலும், அதன் பிறகு பாலுமகேந்திரா வணிக ரீதியிலான படங்களை இயக்கவில்லை.