ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலுமகேந்திரா தனது ஆரம்ப காலத்தில் 'அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை' என மென்மையான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் பரவலாக பாலுமகேந்திராவிற்கு இப்படியான படங்கள்தான் எடுக்க வரும், கமர்ஷியல் படங்கள் வராது என்ற விமர்சனம் இருந்தது.
ஒரு நேர்காணலில் ஒரு பத்திரிகையாளர் இதனை அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். இதனால் கோபம் அடைந்த பாலுமகேந்திரா நீங்கள் கேட்ட மாதிரி என்னால் கமர்ஷியல் படமும் செய்ய முடியும் என்று சவால் விட்டு உருவான படம்தான் 'நீங்கள் கேட்டவை'. படத்தின் கதை அதற்கு முன்பே பலமுறை படமான சாதாரண கதைதான். அந்த கதையை வேண்டுமென்றேதான் அவர் தேர்வு செய்தார்.
தன் தாயை பலாத்காரம் செய்து கொன்றவர்களை, மகன்கள் வளர்ந்து ஆளாகி பழிவாங்குகிற கதை. ஒரு மகனாக தியாகராஜனும், இன்னொரு மகனாக பானுசந்தரும் நடித்தார்கள். நாயகிகளாக சரிதாவும், அர்ச்சனாவும் நடித்தார்கள். சில்க் ஸ்மிதா கவர்ச்சியான வேடம் ஒன்றில் நடித்தார், இவர்கள் தவிர பூர்ணிமா பாக்யராஜ், வனிதா, பாலன் கே.நாயர் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. படமும் பெரிய வெற்றி வெற்றது.
ஒரு படத்திற்கு கதையை விட அந்த கதையை எப்படி எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை நிரூபித்த படம். ஒரு சவாலுக்காக இந்த படத்தை இயக்கினாலும், அதன் பிறகு பாலுமகேந்திரா வணிக ரீதியிலான படங்களை இயக்கவில்லை.