ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலுமகேந்திரா தனது ஆரம்ப காலத்தில் 'அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை' என மென்மையான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் பரவலாக பாலுமகேந்திராவிற்கு இப்படியான படங்கள்தான் எடுக்க வரும், கமர்ஷியல் படங்கள் வராது என்ற விமர்சனம் இருந்தது.
ஒரு நேர்காணலில் ஒரு பத்திரிகையாளர் இதனை அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். இதனால் கோபம் அடைந்த பாலுமகேந்திரா நீங்கள் கேட்ட மாதிரி என்னால் கமர்ஷியல் படமும் செய்ய முடியும் என்று சவால் விட்டு உருவான படம்தான் 'நீங்கள் கேட்டவை'. படத்தின் கதை அதற்கு முன்பே பலமுறை படமான சாதாரண கதைதான். அந்த கதையை வேண்டுமென்றேதான் அவர் தேர்வு செய்தார்.
தன் தாயை பலாத்காரம் செய்து கொன்றவர்களை, மகன்கள் வளர்ந்து ஆளாகி பழிவாங்குகிற கதை. ஒரு மகனாக தியாகராஜனும், இன்னொரு மகனாக பானுசந்தரும் நடித்தார்கள். நாயகிகளாக சரிதாவும், அர்ச்சனாவும் நடித்தார்கள். சில்க் ஸ்மிதா கவர்ச்சியான வேடம் ஒன்றில் நடித்தார், இவர்கள் தவிர பூர்ணிமா பாக்யராஜ், வனிதா, பாலன் கே.நாயர் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. படமும் பெரிய வெற்றி வெற்றது.
ஒரு படத்திற்கு கதையை விட அந்த கதையை எப்படி எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை நிரூபித்த படம். ஒரு சவாலுக்காக இந்த படத்தை இயக்கினாலும், அதன் பிறகு பாலுமகேந்திரா வணிக ரீதியிலான படங்களை இயக்கவில்லை.