கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
சின்னத்திரையின் சூப்பர் ஜோடிகளாக வலம் வரும் ஆல்யா - சஞ்சீவை ரசிகர்கள் அனைவருக்குமே பிடிக்கும். திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையிலும் இருவருக்குமிடையே இருக்கும் காதல் வளர்பிறை போல வளர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், சஞ்சீவ் மீது தனக்கு காதல் வந்தது எப்படி என்ற சுவாரசியமான கதையை ஆல்யா தற்போது கூறியுள்ளார்.
மாடலிங் செய்யும் போதே ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சீவை பார்த்த ஆல்யா அவரை சைட் அடித்திருக்கிறார். அவரிடம் பேசும் போது கூட அண்ணா என அழைத்து தான் பேசியிருக்கிறார். இப்படியாக சென்று கொண்டிருக்கும் போது தான் ராஜா ராணி தொடரில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கமிட்டாகியுள்ளார். அப்போதும் சஞ்சீவை பார்த்து அசடு வழிந்த ஆல்யா, சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட புரிதல், விட்டுக்கொடுக்கும் தன்மையால் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இப்போது திருமணமே நடந்திருந்தாலும் நாங்கள் காதலித்து கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆல்யா கூறியுள்ளார்.