கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் இணைந்து நடித்த விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், திருமணமான இரண்டே மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமிலும் ஒருவரையொருவர் அன்பாலோவ் செய்துள்ளதுடன் தங்களது திருமண புகைப்படங்களையும், காதலிக்கும் போது ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்யுக்தா வெளியிட்ட சமீபத்திய பதிவில், 'எனது அருமை ஹேட்டர்ஸ்…. நீங்கள் நினைத்தது போலவே நடந்துவிட்டதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதேசமயம் இனி தான் என் வாழ்க்கை ஆரம்பமாகிறது. இனிமேல் என் வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியாது. எனவே, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம் விஷ்ணுகாந்தை விட்டு பிரிவும் முடிவை சம்யுக்தா தீர்க்கமாக எடுத்துவிட்டதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.