எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் இணைந்து நடித்த விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், திருமணமான இரண்டே மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமிலும் ஒருவரையொருவர் அன்பாலோவ் செய்துள்ளதுடன் தங்களது திருமண புகைப்படங்களையும், காதலிக்கும் போது ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்யுக்தா வெளியிட்ட சமீபத்திய பதிவில், 'எனது அருமை ஹேட்டர்ஸ்…. நீங்கள் நினைத்தது போலவே நடந்துவிட்டதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதேசமயம் இனி தான் என் வாழ்க்கை ஆரம்பமாகிறது. இனிமேல் என் வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியாது. எனவே, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம் விஷ்ணுகாந்தை விட்டு பிரிவும் முடிவை சம்யுக்தா தீர்க்கமாக எடுத்துவிட்டதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.