நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? |
சின்னத்திரையின் சூப்பர் ஜோடிகளாக வலம் வரும் ஆல்யா - சஞ்சீவை ரசிகர்கள் அனைவருக்குமே பிடிக்கும். திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையிலும் இருவருக்குமிடையே இருக்கும் காதல் வளர்பிறை போல வளர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், சஞ்சீவ் மீது தனக்கு காதல் வந்தது எப்படி என்ற சுவாரசியமான கதையை ஆல்யா தற்போது கூறியுள்ளார்.
மாடலிங் செய்யும் போதே ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சீவை பார்த்த ஆல்யா அவரை சைட் அடித்திருக்கிறார். அவரிடம் பேசும் போது கூட அண்ணா என அழைத்து தான் பேசியிருக்கிறார். இப்படியாக சென்று கொண்டிருக்கும் போது தான் ராஜா ராணி தொடரில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கமிட்டாகியுள்ளார். அப்போதும் சஞ்சீவை பார்த்து அசடு வழிந்த ஆல்யா, சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட புரிதல், விட்டுக்கொடுக்கும் தன்மையால் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இப்போது திருமணமே நடந்திருந்தாலும் நாங்கள் காதலித்து கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆல்யா கூறியுள்ளார்.