பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
சின்னத்திரை நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து இரண்டு மாதங்களிலேயே பிரிந்துவிட்டார். இதனை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் இருவரும் மாறி மாறி குற்றம் சொல்லி வந்தனர். ஒருகட்டத்தில் விஷ்ணுகாந்த் தனக்கு வந்த ஆடியோவை ஊடகத்தில் வெளியிட்டு சம்யுக்தா செய்த தவறுகளை அம்பலபடுத்தினர். அந்த ஆடியோவின் மூலம், சம்யுக்தா ஒரே சமயத்தில் இரண்டுபேரை காதலிப்பது போல் பேசியதும், விஷ்ணுகாந்தை ஏமாற்றியதும் அம்பலமானது.
தற்போது அந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில் சிலர் சம்யுக்தாவிற்கும் சிலர் விஷ்ணுகாந்திற்கு சப்போர்ட் செய்து பேசி வருகின்றனர். அந்த ஆடியோ குறித்து தற்போது பேசியுள்ள சம்யுக்தா அண்ணன் என்று நம்பி அவரிடம் இதையெல்லாம் சொன்னேன். அவர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார். மேலும், அந்த ஆடியோவில் சம்யுக்தாவிடம் பேசி அதை விஷ்ணுகாந்திற்கு அனுப்பியது 'நாம் இருவர் நமக்கு இருவர்' இயக்குநர் ஹரீஸ் என்பதும் தெரியவந்துள்ளது.