பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான எஸ்.தாணு, ‛வி கிரியேஷன்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை 80களின் காலகட்டத்தில் இருந்து நடத்தி வருகிறார். சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். இவர் அடுத்து தயாரிக்கும் பிரமாண்ட திரைப்படம் வாடிவாசல்.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு இவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, ‛நானே வருவேன் படத்திற்கு பதிலாக ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளிவந்த அந்தாதுன் படத்தை தமிழில் தனுஷ் ரீமேக் செய்து நடிக்க மிகவும் ஆசைப்பட்டார். அந்த படத்தின் உரிமையை பெற அந்த தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய போது அவர்கள் லாபத்தில் பெரும் தொகையை கேட்டதால் அப்போது அந்த படத்தை என்னால் தயாரிக்க முடியவில்லை. இப்போது அந்த படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தை தமிழகமெங்கும் நான் தான் வெளியிடுகிறேன் என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.