ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்த நடிகர் பிரித்விராஜ் முதல்முறையாக 2019ல் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து அடுத்த வருடமே அதே மோகன்லால் நடித்த ப்ரோ டாடி என்கிற ஒரு நகைச்சுவை படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். இந்த நிலையில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்பிரான் என்கிற பெயரில் உருவாகும் என இரண்டு வருடங்களுக்கு முன்பே பிரித்விராஜ் அறிவித்திருந்தார்.
அடுத்தடுத்து மோகன்லால் பிரித்விராஜ் இருவருமே தொடர்ந்து பிசியாக நடித்து வந்ததால் அந்த படத்தின் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெரும்பாலும் வெளிநாட்டில் தான் இந்தப்படம் படமாக்கப்பட இருக்கிறது என்று ஏற்கனவே பிரித்விராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது லண்டனில் முகாமிட்டுள்ள பிரித்விராஜ், இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து லண்டனில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு மூன்றாவது நாளாக எம்பிரான் படத்திற்கான லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் பிரித்விராஜ்.




