காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்த நடிகர் பிரித்விராஜ் முதல்முறையாக 2019ல் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து அடுத்த வருடமே அதே மோகன்லால் நடித்த ப்ரோ டாடி என்கிற ஒரு நகைச்சுவை படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். இந்த நிலையில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்பிரான் என்கிற பெயரில் உருவாகும் என இரண்டு வருடங்களுக்கு முன்பே பிரித்விராஜ் அறிவித்திருந்தார்.
அடுத்தடுத்து மோகன்லால் பிரித்விராஜ் இருவருமே தொடர்ந்து பிசியாக நடித்து வந்ததால் அந்த படத்தின் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெரும்பாலும் வெளிநாட்டில் தான் இந்தப்படம் படமாக்கப்பட இருக்கிறது என்று ஏற்கனவே பிரித்விராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது லண்டனில் முகாமிட்டுள்ள பிரித்விராஜ், இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து லண்டனில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு மூன்றாவது நாளாக எம்பிரான் படத்திற்கான லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் பிரித்விராஜ்.




