சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தென்னிந்திய நடிகைகளில் நயன்தாராவுக்கு அடுத்து தற்போது மிகப்பெரிய அளவில், சொல்லப்போனால் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடிகை என்று சமந்தாவை சொல்லலாம். தற்போது அவர் நடிப்பில் புராண படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியுள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சமந்தாவும் பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் சமமான ஊதியம் கொடுக்க வேண்டும் என்கிற விவாதம் எழுந்துள்ளது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சமந்தா, “நிச்சயமாக நானும் அதற்காக போராடத்தான் போகிறேன். ஆனால் என்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் வெற்றிகளால், உங்களுக்கு நாங்களே இந்த அளவு ஊதியம் கொடுக்கிறோம் என அவர்களாகவே முன்வந்து கொடுக்கும்படி செய்வேனே தவிர, யாரிடமும் சென்று எனக்கு சரிசமமாக சம்பளம் கொடுங்கள் என்று கெஞ்ச மாட்டேன்” என்று நெத்தியடியாக பதில் அளித்துள்ளார்