சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகரான சிரஞ்சீவியின் சகோதரர்களில் ஒருவர்தான் நடிகர் நாகபாபு. இவரது மகள் நிஹாரிகா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2020 டிசம்பர் மாதம் இவருக்கும் ஐதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சில நாட்களாகவே நிஹாரிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிஹாரிகாவும், சைதன்யாவும் தங்களது சோசியல் மீடியா கணக்கை ஒருவருக்கு ஒருவர் அன் பாலோ செய்துள்ளனர்.
அதேசமயம் நிஹாரிக தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா கணக்கில் அப்படியே விட்டு வைத்திருக்க, அவரது கணவரோ தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதையெல்லாம் வைத்து தான், தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்கிற செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.