சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகரான சிரஞ்சீவியின் சகோதரர்களில் ஒருவர்தான் நடிகர் நாகபாபு. இவரது மகள் நிஹாரிகா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2020 டிசம்பர் மாதம் இவருக்கும் ஐதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சில நாட்களாகவே நிஹாரிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிஹாரிகாவும், சைதன்யாவும் தங்களது சோசியல் மீடியா கணக்கை ஒருவருக்கு ஒருவர் அன் பாலோ செய்துள்ளனர்.
அதேசமயம் நிஹாரிக தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா கணக்கில் அப்படியே விட்டு வைத்திருக்க, அவரது கணவரோ தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதையெல்லாம் வைத்து தான், தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்கிற செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.