20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் எளிய கிராமத்து மனிதராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நடிகர் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஜோதிகாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள ‛காதல் தி கோர்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து உருவாகிவரும் ‛கண்ணூர் ஸ்குவாட்' என்கிற படத்தில் துப்பறியும் போலீசு அதிகாரியாக தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புனே நகரத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு லொக்கேஷனை மாற்றி மாற்றி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். போலீஸ் அதிகாரியான மம்முட்டி ஒரு வழக்கு தொடர்பாக தனது விசாரணையை இந்த பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்கிறார் என்பது போன்று கதை நகர்வதால் இப்படி அடிக்கடி வெவ்வேறு லொகேஷனை மாற்றி காட்சிகளை படமாக்கி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.