400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் |
வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை ஷாலு சவுதாசியா. ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டில் கம்மத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபத்தில் உள்ள கே.பி.ஆர் பூங்காவில் ஷாலு நடை பயிற்சி சென்றபோது சில மர்மநபர்கள் அவரை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். இதில் ஷாலு கூச்சலிட்டதால் அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இந்த சம்பத்திற்கு பிறகு ஷாலு அந்த பூங்காவில் நடைபயிற்சி செய்யவில்லை.
கடந்த சில வாரங்களாக அவர் மீண்டும் நடைபயிற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் பூங்காவில் நடந்து செல்லும்போது ஒரு வாலிபர் பின்னாலேயே வந்து தன்னை துன்புறுத்துவதாக பூங்கா ஊழியர்களிடம் புகார் செய்தார். ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஷாலு சவுராசியாவும் போலீசில் புகார் அளித்தார். வாலிபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் நடிகையை பின் தொடரவில்லை என்றும், தானும் நடைபயிற்சி செய்ததாக தெரிவித்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அந்த வாலிபர் சொல்வது உண்மை என்று உறுதிப்படுத்தினர். “2021ம் ஆண்டு நடந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து ஷாலு இன்னும் வெளிவரவில்லை. யாரோ தன்னை பின்தொடர்வதாக அவர் உணர்கிறார். இதனால் அவருக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்க இருக்கிறோம்” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.