'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
மலையாள திரையுலகில் சமீப நாட்களாக குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து 50 முதல் 100 கோடிகளை அசால்ட்டாக அள்ளி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த படத்தின் இயக்குனர்களுக்கு அடுத்து மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் வாய்ப்பும் தானாக தேடி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான ரோமாஞ்சம் என்கிற திரைப்படம் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவாகி இப்போது வரை 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இயக்கியுள்ளார். பெரிய அளவில் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து ஹாரர் கலந்த காமெடி படமாக இந்த படத்தை உருவாக்கி ஹிட் ஆக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்ததாக நடிகர் பஹத் பாஸில் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் மார்ச் மாதமே துவங்கப்பட்டு வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதே போல கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படமும் இதே பாணியில் 50 கோடிக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது. தற்போது அந்த படத்தின் இயக்குனர் விபின் தாஸ் மீண்டும் அதே ஹீரோவை வைத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் பிரித்விராஜ் தானே முன்வந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.