இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளில் நடைபெறும் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் நடிக்கப் போகும் நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் பணியில் உள்ள ராஜமவுலி அது முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்தபடத்திற்கு முன்பாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் மகேஷ்பாபு. ஏற்கனவே ஒருக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வரும் மகேஷ் பாபு, தற்போது தனது உடல் எடையை குறைத்து பிட்டாக மாறிக் கொண்டிருக்கிறார் . அதற்காக அவர் ஜிம்மில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மகேஷ் பாபு.