பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளில் நடைபெறும் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் நடிக்கப் போகும் நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் பணியில் உள்ள ராஜமவுலி அது முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்தபடத்திற்கு முன்பாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் மகேஷ்பாபு. ஏற்கனவே ஒருக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வரும் மகேஷ் பாபு, தற்போது தனது உடல் எடையை குறைத்து பிட்டாக மாறிக் கொண்டிருக்கிறார் . அதற்காக அவர் ஜிம்மில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மகேஷ் பாபு.




