புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
திரைப்படக்கல்லூரி மாணவர்கள் இணைந்து "உ" என்ற படத்தை தயாரிக்கிறார்கள். இதில் தம்பி ராமையா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் 25 புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். திடீர் பணக்காரனாக ஆசைப்படும் தம்பி ராமையா அதற்காக நான்கைந்து இளைஞர்களை சேர்த்துக் கொண்டு திட்டம்போடுவது£ன் படத்தின் கதை. இதில் ஒரு காதல் கதையும் உண்டு. படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் காதல் கதையை ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற காட்சிகளை படமெடுத்தார்கள். கடைசியாக கேரளாவில் இருந்து பிந்து உன்னி என்ற ஹீரோயினை புக் செய்தார்கள். காதல் காட்சியை படம் எடுப்பதற்காக அவரை கொடைக்கானலுக்கு வரும்படி சொல்லிவிட்டு படக்குழுவினர் கொடைக்கானல் சென்றனர். படப்பிடிப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டு காத்திருந்தபோது பிந்து உன்னி வந்து சேரவில்லை.
போன் செய்தாலும் பதில் இல்லை. பிறகு ஒரு வழியாக அவரை போனில் பிடித்து கேட்டபோது. "எனக்கு உங்க படத்துல நடிக்க இஷ்டம் இல்லை. நீங்கெல்லாம் ஸ்டூடண்டாமே உங்களை நம்பி எப்படி நடிக்கிறது. நான் வர்றது. நான் பெரிய இயக்குனர் படத்துல நடிச்சி நயன்தாரா, அசின் சேச்சிங்க மாதிரி வரணம்"னு சொல்லிவிட்டாராம். அவருடன் எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதுவும் போடததால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது படக்குழுவில் இருந்த ஒருவர். எனக்கு தெரிந்த பெண் ஒருவர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் பேசி பார்க்கட்டுமா என்ற கேட்டு உடனே அவரை தொடர்பு கொண்டார். அவரும் பாண்டிச்சேரியிலிருந்து தனது படத்தை மெயில் பண்ண இயக்குனர் ஆஷிக் உள்பட அத்தனை பேரும் ஓகே சொல்ல. பாண்டிச்சேரியிலிருந்து பறந்து வந்தார் நேகா. இப்போது படப்பிடிப்பு பிசியாக நடந்து கொண்டிருக்கிறது. திடீர் நாயகி நேகா எப்படி இருக்கிறார் என்று படத்தை பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.