22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
விஜய் நடித்த வாரிசு படம் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஜெயசுதா, பிரபு, சங்கீதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசை அமைத்திருந்தார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழ், தெலுங்கில் உருவான இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார். தில்ராஜூ தயாரித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் வசூலில் நல்ல லாபத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 250 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 5 நாளில் ரூ.150 கோடி வசூலை எட்டி உள்ளது.
இந்த நிலையில் படக்குழுவினர் சென்னை நட்சத்திர ஓட்டலில் வெற்றி விழாவை கொண்டாடினார்கள். இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா தவிர மற்ற கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் வம்சி, “படக்குழு என் மீது வைத்த நம்பிக்கைதான் இந்தப் படம். அந்த நம்பிக்கையை நிஜமாக்கிய தமிழ் மக்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்யிடம் இந்தக் கதை சொல்லும்போது, 'நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்' என சொன்னேன்.
என்னை பலரும் தெலுங்கு இயக்குநர் என கூறுவது காயப்படுத்துகிறது. நான் தமிழ், தெலுங்கு ஆள் இல்லை. முதலில் நான் ஒரு மனிதன். பார்வையாளர்களின் வரவேற்பின் மூலம் என்னைச் சுற்றி வரையப்பட்டிருக்கும் அனைத்து எல்லைகளையும் கடக்க முயலும் மனிதன். மனதில் எனக்கு சிறிய இடமளித்த தமிழ் மக்களுக்கு நன்றி. 'இது பக்கா தமிழ் படம்' என்பதைத்தான் நான் முதலிலிருந்து கூறி வருகிறேன். என் தந்தை படம் பார்த்து கண்ணீர்விட்டார். அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம்” என்றார்.