பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
பான் இந்தியா படமாக 'பாகுபலி 2' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு நேரடிப் படங்கள், டப்பிங் படங்கள் என்பது வித்தியாசம் இல்லாமல் ஆகிவிட்டது. அதன் பின் ஓடிடி தளங்களிலும் பல படங்கள் அந்தந்த பிராந்திய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானதால் மக்கள் அவற்றையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது வெளியாகும் பல தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடப் படங்கள் மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகி வருகின்றன. அவற்றில் சில படங்கள் நல்ல வசூலைக் கொடுத்து வெற்றிப் படங்களாகவும் அமைகின்றன.
டப்பிங் படங்கள் குறித்து 'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். “எங்களது நிறுவனம் 'அனிமல், பிம்பிசாரா, ஜெயிலர், தசரா, லவ் டுடே, பொன்னியின் செல்வன்” ஆகிய படங்களை ஆந்திரா, தெலங்கானா மாநிங்களில் வெளியிட்டது. இதில் ஒவ்வொரு படமும் வினியோகஸ்தர்களுக்கு லாபகரமான படமாகத்தான் அமைந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.