ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
நயன்தாரா நடித்த மாயா என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். அதைத்தொடர்ந்து டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கிய இவர் தற்போது மீண்டும் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அதேசமயம் இந்த படத்திற்கு முன்னதாக அவர் எஸ்ஜே சூர்யாவை வைத்து இறவாக்காலம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்த அந்த படம் சில காரணங்களால் எப்போது ரிலீசாகும் என்பது தெரியாமல் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுபற்றி தற்போது அஸ்வின் சரவணன் கூறும்போது, “அந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. தயாரிப்பாளரும் படத்தை பார்த்து அவர்களுக்கும் திருப்தி தான். ஆனால் என்ன காரணத்தினால் இந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் எந்த ஒரு தனி மனிதரையும் குற்றம் சுமத்த முடியாது. இவ்வளவு நீண்ட நாட்களாக காத்திருப்பது மிகுந்த வலியை தருகிறது. ஆனால் என்றேனும் ஒருநாள் இந்த படம் தன்னுடைய பார்வையாளர்களை தேடி திரைக்கு வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.